சொத்து வழக்கில் இருந்து விடுவிக்க கோரி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு

விஜயபாஸ்கர் | கோப்புப்படம்
விஜயபாஸ்கர் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுக்கோட்டை: கடந்த அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். அப்போது, வருமானத்தைவிட 54 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

2021-ல் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர். இதில், ரூ.23.85 லட்சம் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 3.75 கிலோ வெள்ளிப் பொருட்கள், 136 கனரக வாகன பதிவு ஆவணங்கள், 19 ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் 216 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,“எங்கள் மீது லஞ்ச ஒழிப்புபோலீஸாரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கிறோம். ஆகையால், எங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்” என விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் வழக்கறிஞர்கள் மூலம் தனித்தனியாக நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.பூரண ஜெயஆனந்த், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்.25-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in