Published : 26 Feb 2024 05:59 AM
Last Updated : 26 Feb 2024 05:59 AM

தீவுத்திடல் கண்காட்சி: 42 நாளில் 4.79 லட்சம் பேர் வருகை

சென்னை: சென்னை தீவுத்திடல் கண்காட்சிக்கு 42 நாட்களில் 4.79 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். சென்னை தீவுத்திடலில் 48-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, கடந்த ஜனவரி 14-ம் தேதி தொடங்கியது. 70 நாட்கள் நடைபெறும் சுற்றுலா கண்காட்சியில் 51 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டுபுற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

பொருட்காட்சியை நேற்று முன்தினம் (24-ம் தேதி) 12,793 பேர் பார்வையிட்டுள்ளனர். கடந்த42 நாட்களில் 3,99,892 பெரியவர்கள், 79,101 சிறியவர்கள் எனமொத்தம் 4,78,993 பேர் பொருட்காட்சியை பார்வையிட்டுள்ளனர் என சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x