

சென்னை: அகில இந்திய காங்கிரஸின் வங்கிகணக்கை முடக்கியதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ளவருமான வரித்துறை அலுவலகங்கள் முன்பு நாளை (பிப்.19) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது..
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து லஞ்சமாக பெறுவதற்கு பதிலாக தேர்தல்பத்திர நன்கொடை திட்டம் மூலம் பாஜக மட்டும் ரூ.6,572 கோடியை பெற்றுள்ளது. இது மொத்த நன்கொடையில் 50 சதவீதம். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறுவது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள் ளது.
இதை சகித்துக்கொள்ள முடியாத மத்திய பாஜக அரசு, வருமானவரித்துறையை ஏவி அகில இந்தியகாங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ்வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. 2018-19 ஆண்டில் காங்கிரஸ்கட்சி, காலம் தவறி வருமானவரிகணக்கை தாக்கல் செய்ததால்ரூ.210 கோடி அபராதம் விதித்திருக்கிறது. மேலும், காங்கிரஸின் வங்கி கணக்குகளையும் முடக்கியது.
தேர்தல் பத்திர நன்கொடை மூலமாக ரூ.1 கோடி கொடுத்தவர்களின் எண்ணிக்கை 6,812. இதன்மூலம் ரூ.6,812 கோடி நன்கொடையை வழங்கியது யார்? யார் இந்த கார்ப்பரேட்டுகள்? இந்த நன்கொடைக்கு ஈடாக கார்ப்பரேட்களுக்கு பாஜகசெய்த உதவி என்ன? அதானி, அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு பாஜக செய்த சட்டவிரோதஉதவிகளுக்கு ஈடாக நிதி பெறப்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?
இதன்மூலம் தேர்தல் களத்தில்சமநிலையற்ற தன்மை ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் நீதி கிடைத்ததைப் போல காங்கிரஸ் கட்சிக்கும் உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
வருமான வரித்துறை மூலம்காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை மத்திய பாஜக அரசு முடக்கியதைக் கண்டிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உளள வருமான வரித்துறை அலுவலகங்கள் முன்பு நாளை காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.