

காரைக்கால்: காரைக்கால் கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த வீரவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் நாகை சாமந்தான் பேட்டை தமிழ்வாணன், தரங்கம்பாடி கார்த்திக், விக்னேஷ், வீரேந்திரராஜன் உள்ளிட்ட 12 மீனவர்கள் ஏப்.10-ம் தேதி கடலுக்குச் சென்றனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி விசைப்படகுடன் மீனவர்கள் 12 பேரையும் கைது செய்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.