இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் கைது; 2 படகு பறிமுதல்

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் கைது; 2 படகு பறிமுதல்
Updated on
1 min read

ராமேசுவரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்து, 2 விசைப்படகுகளைப் பறிமுதல் செய்தனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம்500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,000 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே அலெக்ஸ், அன்றன் சசிக்குமார் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இருஃபைபர் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, அந்த படகுகளில் இருந்த மெட்டன், ஜான்சன், அந்தோணி, கா.முனியசாமி, சா.முனியசாமி, சேகர், சேசு ராஜா, கிளவர், பிரசாந்த், பிரபாகரன், செல்வதாமஸ், செல்வராஜ், அன்றன் சசிக்குமார், ஆஸ்வால்ட், பிராங்க்ளின், சே.முனியசாமி, ஆரோக்கியம் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த சீனு மாலிக், தானிஷ்வர் மாலிக் ஆகிய 19 மீனவர்களைக் கைது செய்தனர்.

பிப்.22 வரை காவல்: பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைதுறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்திய மீனவர்களை வரும் 22-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 4-ம் தேதி ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற 23 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in