திமுக எம்எல்ஏ மகன், மருமகளின் ஜாமீன் மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உத்தரவு

திமுக எம்எல்ஏ மகன், மருமகளின் ஜாமீன் மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினாவை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஜன.25-ல் கைது செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதிடி.வி.ஆனந்த் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.என்.கணேஷ் மற்றும் போலீஸார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆகியோர் ஆஜராகிவாதிட்டனர். அதையடுத்து நீதிபதி, கணவன், மனைவியின் ஜாமீன் மனுவுக்கு போலீஸார் தரப்பிலும், பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பிலும்பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.2-க்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in