“தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் கிடையாது” - ஓபிஎஸ் உறுதி

“தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் கிடையாது” - ஓபிஎஸ் உறுதி
Updated on
1 min read

கரூர்: தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் கிடையாது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அதிமுக தொண்டர்கள் உரிமைமீட்புக் குழு சார்பில் கரூரில் நேற்று மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசியது: அதிமுக தொடங்கிய போது சட்ட விதிகளை உருவாக்கிய எம்ஜிஆர், பொதுச் செயலாளர் பதவியை தொண்டர்கள் மூலம் தான் தேர்வு செய்ய வேண்டும் என விதியை உருவாக்கிவைத்தார். இவ்விதியை திருத்திபொதுச் செயலாளரான பழனிசாமி, அப்பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தொண்டர்கள் அவரை தூக்கி எறிவார்கள்.

பழனிசாமி பொறுப் பேற்ற பிறகு நடந்த 9 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி மட்டுமே அடைந்து வருகிறது. பிரிந்து கிடப்பவர்கள் ஒன்றாக சேர வேண்டும். ஒன்றிணைந்து மக்களை சந்தித்தால் வெற்றி நிச்சயம் என மக்கள் சொல்கின்றனர். திமுகவுக்கு மிக கெட்டபெயர் உள்ளது. தனது சுயநலத்தால் இயக்கத்தை பாழ்படுத்தி வருகிறார் பழனிசாமி. எனக்குதனிக்கட்சி தொடங்கும் எண்ணம் கிடையாது. மக்களவைத் தேர்தலில் நம்முடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in