சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை:. வேளாண்துறை ஆணையராக இருந்த எஸ்.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக மாற்றம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத் துறை செயலாளராக மாற்றம் நில நிர்வாகத் துறை ஆணையராக இருந்த எஸ்.நாகராஜன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம் மீன்வளத் துறை ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராக மாற்றம் சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநராக ஆர்.செல்வராஜ் நியமனம்.