புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் ஜன.18 முதல் போக்குவரத்து மாற்றம்

கோப்பு படம்
கோப்பு படம்
Updated on
1 min read

புதுச்சேரி: கண்டமங்கலத்தில் புதுச்சேரி - விழுப்புரம் ரயில்வே பாதையில் மேம்பாலம் கட்டும் பணிதொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஜன. 18-ம் தேதி முதல்புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதுச்சேரி பிரிவு நிர்வாக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை பணி மிக விரைவாக நடந்து வரும் நிலையில், கண்டமங்கலம் குறுக்கே புதுச்சேரி - விழுப்புரம் ரயில்வே பாதை செல்கிறது. இங்கு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதனால் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல முடியாத நிலைஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஜன.18-ம் தேதி முதல் விழுப்புரம் - புதுச்சேரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் கலித்தீர்த்தாள்குப்பம், குச்சிப்பாளையம், பிஎஸ்.பாளையம், வாதானூர், சோரப்பட்டு, செல்லிப்பட்டு, பத்துக்கண்ணு, வில்லியனூர் வழியாக வந்து புதுச்சேரிக்கு செல்ல வேண்டும்.

புதுச்சேரி - விழுப்புரம் மார்க்க மாக செல்லும் வாகனங்கள் சிவராந்தகம், கீழுர், மிட்டா மண்டகப்பட்டு, பள்ளி நேலியனூர், திருபுவனைப்பாளையம் மற்றும் திருபுவனை வழியாக வந்து விழுப்புரம் செல்ல வேண்டும்.

மேலும், விழுப்புரம் - புதுச்சேரி செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திருவண்டார் கோவில், கொத்தபுரிநத்தம், வனத்தாம்பாளையம், ரசபுத்திரப்பாளையம், சின்னபாபு சமுத்திரம், கென்டியங்குப்பம், பங்கூர் வழியாக புதுச்சேரிக்கு செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in