

மதுரை: தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நோட்டீஸ் வழங்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் செல்லூர் ராஜூ இன்று (ஜன. 11) நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.