Published : 06 Jan 2024 07:53 AM
Last Updated : 06 Jan 2024 07:53 AM

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர்

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் நேற்று தாயகம் திரும்பினர்.

கடந்த டிச. 6-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற உயிர்தராஜ் என்பவரது விசைப்படகையும், அதிலிருந்து 8 மீனவர்களையும் தலைமன்னார் அருகே இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள், வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல, புதுக்கோட்டைமாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து 2 விசைப்படகுகளில் கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் மற்றும் ஜெகதாப்பட்டினத்திலிருந்து ஒரு விசைப்படகில் கடலுக்குச் சென்ற 4 மீனவர்கள் என 13 மீனவர்களை நெடுந்தீவு அருகே கைது செய்த இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

நீதிமன்றத்தால் விடுவிப்பு: இந்நிலையில், டிச. 20-ம் தேதி மன்னார் நீதிமன்றத்தால் ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரும், டிச. 21-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேரும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான 21 மீனவர்களும் நேற்று பிற்பகல் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

தொடர்ந்து, சென்னையில் இருந்து மீனவர்கள் 8 பேர் ராமேசுவரத்துக்கும், 13 மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் தனித்தனி வாகனங்களில் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் மூலம் நேற்றிரவு அழைத்து வரப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x