தமிழக அஞ்சல்துறை தலைவர் காலமானார்

சாருகேசி
சாருகேசி
Updated on
1 min read

சென்னை: தமிழக அஞ்சல்துறை தலைவராக இருந்தவர் சாருகேசி (58). கடந்த 1965-ம் ஆண்டில் பிறந்த இவர் டெல்லியில் கல்வி படிப்பையும், மேற்கு வங்கம், கொல்கத்தா, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பையும் முடித்தார். கடந்த1990-ம் ஆண்டு இந்திய அஞ்சல் துறையில் சேர்ந்தார். கர்நாடகா, சிக்கிம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இடங்களில் அஞ்சல்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். அண்மையில், தமிழக அஞ்சல்துறை தலைவராக பதவி வகித்து வந்தார். இவர் திருவான்மியூர், ராதாகிருஷ்ணன் நகர், எல்ஐசி காலனி, 2-வது தெருவில் வசித்துவந்தார். இவர் கடந்த ஒரு மாதமாக உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று முன்தினம் காலமானார். மறைந்த சாருகேசியின் கணவர் னிவாசன் ஆவார். சச்சிட், சிவா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இறுதிச்சடங்கு திருவான்மியூர் இல்லத்தில் இன்று (டிச.21) காலை நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in