Published : 26 Oct 2023 04:06 AM
Last Updated : 26 Oct 2023 04:06 AM

தேவர் குருபூஜை: ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு

ராமநாதபுரம்: தேவர் குரு பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 28-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் வரும் 30-ம் தேதியன்று முத்து ராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு வரும் 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும்

அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நாட்களில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x