வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முதல்வருக்கு வணிகர் சங்கங்கள் கோரிக்கை

வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முதல்வருக்கு வணிகர் சங்கங்கள் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் குடியிருப்பு மனைகளின் அரசு மதிப்பீடு அனைத்து பகுதிகளிலும் அண்மையில் உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அதிர்ச்சியில் இருந்துமீள்வதற்குள் வணிக பயன்பாட்டுக்கான மனைகளின் அரசு வழிகாட்டு மதிப்பீடு, சாதாராண குடியிருப்பு மனை மதிப்பீட்டிலிருந்து 3 மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஏற்கெனவே, வணிகர்களும், வணிகமும் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன. ஆன்லைன் வர்த்தகம், பணப்புழக்கம் குறைவு என பல்வேறு காரணங்களால் தொழிலும், வணிகமும் நசிந்து வரும் நிலை இருக்கிறது.

இக்காலகட்டத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பை 3 மடங்குஉயர்த்துவதாக இருப்பது மிகவும்வேதனைக்குரியதாகும். எனவே வணிக மனைகளுக்கான அரசுவழிகாட்டு மதிப்பீட்டு உயர்வை முதல்வர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in