முதலீட்டுக்கான வருவாய் உத்தரவாதத்துடன் காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் கிளை அமைக்க வாய்ப்பு

முதலீட்டுக்கான வருவாய் உத்தரவாதத்துடன் காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் கிளை அமைக்க வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: எஸ்.எம்.சில்க்ஸ் காஞ்சிபுரம், சென்னை, கோவை, திருவள்ளூர், நாமக்கல் மற்றும் பெங்களூரு பகுதிகளில் 15 விற்பனையகங்களை நிறுவி பட்டு மட்டுமே விற்பனை செய்து மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாகும். காஞ்சிபுரம் பட்டு என்றாலே எஸ்.எம்.சில்க்ஸ் என்று பெயர் பெற்றுள்ளது.

பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையை மாற்றி நடுத்தர மக்களும் பட்டு வாங்க முடியும் வகையில், உற்பத்தி விலையில் தரமான பட்டை அறிமுகம் செய்து தமிழகமெங்கும் பட்டு கண்காட்சி மூலம் விற்பனை செய்து வருகிறது. பட்டு விற்பனை, டிசைன், வண்ணங்களில் என அனைத்திலும் புதுமை படைத்து வருகிறது.

காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் புதிதாகத் தொழில்முனைவோர் ஃபிராஞ்சைஸ் மூலம் முதலீட்டுக்கு ஏற்ற வருவாய் உத்தரவாதத்துடன் நாடெங்கும் கிளைகளை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு ஊர்களில் காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் கிளைகளை நிறுவ விரும்புவோர் 9500000889 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

எஸ்.எம்.சில்க்ஸ் நிறுவனர் எம்.எஸ்.மனோகரன் பொதுநல தொண்டிலும் ஆர்வம் கொண்டவர். சுலபத் தவணையில் வீட்டு மனைகளை விற்பனை செய்தவர். பொருளாதாரத்தில் எளிய மக்களும் குறைந்த விலையில் பட்டை வாங்க பட்டுச்சேலை சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆன்மிகத்திலும் மிகுந்த நாட்டம் உடையவரான இவர் கோயில் கும்பாபிஷேகங்களையும் நடத்தியுள்ளார். இலவச உணவுக் கூடம் அமைத்து ஏழை எளிய மக்களுக்குத் திருமண விழா, காதணி விழா, அன்னதானங்களை வழங்கி வருகிறார். காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in