கிரைண்டரில் மாவு அரைத்தபோது சோகம்: மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

கிரைண்டரில் மாவு அரைத்தபோது சோகம்: மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் கே.கே.நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகர், ராணி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி வசந்தி (47). இவர் நேற்று முன்தினம் மதியம் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது மின்கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சுவிட்ச் ஆப் செய்ய முயன்ற வசந்தி மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு, வசந்தியை மீட்டு கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வசந்தி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து கே.கே.நகர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in