

மதுரை: தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதுக்கு மதுரை மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்.5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் அன்றைய தினம் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்னும் நல்லாசிரியர் விருதாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மதுரை மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய விருது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் செப்.5ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.
நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் விவரம்: தொடக்கக்கல்வித்துறை: 1. க.கார்த்திகேயன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெரியார்நகர், திருப்பரங்குன்றம், 2. அ.அமிர்தசிதரான்மணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சீமானூத்து, உசிலம்பட்டி ஒன்றியம், 3. அ.ஜோசப் ஜெயசீலன், தலைலமைஆசிரியர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சிங்காரத்தோப்பு மதுரை தெற்கு, 4 எப்.ஹெலன், தலைமை ஆசிரியர், மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, சொக்கிகுளம் மதுரை தெற்கு, 5 மு.தாமரைச்செல்வி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மைக்குடி, திருமங்கலம் 6. ரா.மகேஸ்வரி, தலைமையாசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குருவிளாம்பட்டி மதுரை மாவட்டம்.
பள்ளிக் கல்வித்துறை: 1.செ.வெண்ணிலாதேவி, முதுகலை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி பாரபத்தி, 2 ச.சிந்தியா,பட்டதாரி ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம், 3.ஏ.எல்.துர்கா, தலைமை ஆசிரியர், சவுராஸ்ட்ரா (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி, மதுரை, 4.ஏ.சேவியர் ராஜ் , தலைமை ஆசிரியர், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, கீழவாசல் மதுரை, 5.சௌ.உமாமகேஸ்வரி தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, சருகுவலையப்பட்டி, 6. நா.மீனாட்சி சுந்தரம், முதுகலை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒத்தக்கடை, மெட்ரிக் பள்ளி: 1.ப.பிரபாகரன், முதல்வர், கேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோ.புளியங்குளம் மதுரை.