‘சிங்கப்பெண்’ சிறப்பு படைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வெளியிட்டார்
‘சிங்கப்பெண்’ சிறப்பு படைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: ‘சிங்​கப்​பெண்’ சிறப்பு படையை பொது​மக்​கள் தொடர்பு கொள்ள, கட்​ட​ணமில்லா தொலைபேசி எண்​ணை, டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் வெளி​யிட்​டுள்​ளார்.

பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றங்​களை தடுக்​கும் வகை​யிலும், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உடனடி காவல் உதவி கிடைக்​கும் வகை​யிலும், தமிழக காவல்துறை​யின் சார்​பில், சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை உரு​வாக்​கப்​பட்டு செயல்​பட்டு வரு​கிறது. பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் அதி​கம் பாதிக்​கப்​படக் கூடிய பகு​தி​களில் கண்​காணிப்பு பணியை தீவிரப்​படுத்​துதல், அவசர சூழ்​நிலைகளில் விரைந்து சென்று பாது​காப்பு வழங்​குதல், குற்​றங்​களை தடுக்​கும் வகை​யில் நடவடிக்கை மேற்​கொள்​ளுதல் ஆகிய​வற்றை முக்​கிய நோக்​க​மாக கொண்​டு, இப்​படை தமிழகம் முழு​வதும் செயல்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், சிங்​கப் பெண் சிறப்பு அதிரடிப்​படை​யின் செயல்​பாடு​களை மேலும் வலுப்​படுத்​தும் வகை​யில், அதன் பிரத்​யேக உதவி எண்​ணாக ‘1091’ அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த உதவி எண், மாநில அவசர கால உதவி எண்​ணான ‘112’ உடன் ஒருங்​கிணைக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம், பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் எதிர்​கொள்​ளும் தொந்​தர​வு, குடும்ப வன்​முறை, பாலியல் தொந்​தர​வு, மிரட்​டல், பின்​தொடர்​தல் உள்​ளிட்ட பிரச்​சினை​கள் குறித்து உடனடி​யாக தகவல் தெரிவிக்க முடி​யும்.

1091 எண்​ணுக்கு வரும் அழைப்​பு​களை 24 மணி நேர​மும் செயல்​படும் மாநில காவல் கட்​டுப்​பாட்டு அறை​யில் உள்ள பயிற்சி பெற்ற காவலர்​கள் கண்​காணிப்​பார்​கள். புகார்​கள் பெறப்​பட்​ட​வுடன், சம்​பந்​தப்​பட்ட மாவட்ட காவல் கட்​டுப்​பாட்டு அறைக்​கும், அரு​கில் உள்ள சிங்​கப் பெண் அதிரடிப்​படை அல்​லது ரோந்து குழு​வினருக்​கும் தகவல் அனுப்​பப்​பட்​டு, சம்பவ இடத்​துக்கு காவலர்​கள் விரைந்து செல்​வதற்​கான நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு பாது​காப்பு வழங்​கு​வதுடன், தேவை​யான சட்ட நடவடிக்​கைகள் உடனடி​யாக மேற்​கொள்​ளப்​படு​வதை காவல்​துறை தொடர்ந்து கண்​காணிக்​கும். பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் பாது​காப்​பான சூழலில் வாழும் வகை​யில், சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை மற்​றும் 1091 உதவி எண் மூலம் காவல்​துறை தனது பணி​களை தீவிரப்​படுத்தி வரு​கிறது. அவசர உதவி தேவைப்​படும் நேரங்​களில் தயக்​கமின்றி 1091 எண்ணை தொடர்பு கொள்​ளு​மாறு, பொது​மக்​களுக்கு டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் மற்​றும் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை ஐஜி பவானீஸ்​வரி அறி​வுறுத்​தி உள்​ளனர்​.

‘சிங்கப்பெண்’ சிறப்பு படைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
முதல்வர் விஜய்க்கு 52-வது பிறந்தநாள்: பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in