

கோப்புப் படம்: எஸ்.குரு பிரசாத்
சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்கள் தடையின்றித் தங்களின் ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கும் வகையில், தேவையான ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்துள்ளது. இதன்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து மொத்தம் 10,663 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதில் சிறப்புப் பேருந்துகள் மொத்தம் 5,574 இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 21 முதல் ஏப்ரல் 23-ம் தேதி வரை இந்தப் பேருந்துகள் இயக்கப்படும். கூட்ட நெரிசலைத் தவிர்க்க www.tnstc.in இணையதளம் அல்லது TNSTC App மூலம் பயணிகள் முன்கூட்டியே தங்களின் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். தகவல்கள் அறிய 94450 14436 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.