மாநகர பேருந்துகள் முழு நடையையும் பூர்த்தி செய்ய அறிவுறுத்தல்

மாநகர பேருந்துகள் முழு நடையையும் பூர்த்தி செய்ய அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மாநகர பேருந்துகள் முழு நடையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகம் அனுப்பிய சுற்றறிக்கை: மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துவழித்தட பேருந்துகளும் கால அட்டவணைப்படி இயக்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறுதடத்தில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் முழு பயண நடைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல்மற்றும் இதர காரணங்களால் அட்டவணைப்படி முழு பயண நடைகளை பூர்த்தி செய்வதற்கு மிகைப் பணி ஊதியம் வழங்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு முழு பயணநடைகளையும் இயக்கி மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகத்துக்கு நற்பெயரையும், வருவாயையும் பெருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in