ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் டிஜிபி சங்கர் ஜிவால் சந்திப்பு

ஆளுநர், டிஜிபி சந்திப்பு
ஆளுநர், டிஜிபி சந்திப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தின் புதிய டிஜிபி-யாக நியமிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக சங்கர் ஜிவால் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார்.

தமிழக காவல் துறையின் தலைவராக இருக்கும் டிஜிபி சி.சைலேந்திரபாபு கடந்த ஜூன் 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, தமிழக காவல் துறையின் புதிய தலைவராகவும், சட்டம், ஒழுங்கு டிஜிபியாகவும் சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் புதிய டிஜிபி-யாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சைலேந்திரபாபு விடை பெற்றார். இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, சங்கர் ஜிவால் சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தின் புதிய டிஜிபி-யாக நியமிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக சங்கர் ஜிவால் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in