தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு பட்டியல் அனுப்ப உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

கடந்த ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பெயர்ப்பட்டியலை தயாரித்து முழு பரிந்துரை அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது உரிய வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

அந்த பட்டியலில் 17(ஏ), 17(பி)-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்றவர்களை பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கக்கூடாது. மாவட்டக் கல்வி அலுவலர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்ற வகைப்பாட்டின்படி பட்டியல் இருக்க வேண்டும். இதில் தவறுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டால் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in