காட்டுமன்னார்கோவிலில் பணியில் இருந்த தீயணைப்பு நிலைய அலுவலர் உயிரிழப்பு

கொளஞ்சிநாதன்
கொளஞ்சிநாதன்
Updated on
1 min read

கடலூர்: காட்டுமன்னார்கோவில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் (51). இவர், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாழைகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர்.

கொளஞ்சிநாதன் நேற்று காலை வழக்கம் போல வீட்டில் இருந்து தீயணைப்பு நிலையத்துக்கு பணிக்கு வந்தார். சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே சக தீயணைப்பு வீரர்கள் அவரை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிண கிடங்கிற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. உயிரிழந்த கொளஞ்சி நாதனுக்கு கார்த்திகா தேவி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in