டாஸ்மாக் பார் டெண்டருக்கு எதிரான தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு - அவசர வழக்காக விசாரிக்க அரசு கோரிக்கை

டாஸ்மாக் பார் டெண்டருக்கு எதிரான தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு - அவசர வழக்காக விசாரிக்க அரசு கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: டாஸ்மாக் பார் டெண்டருக்கு எதிரான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் அருகில் தின்பண்டங்கள் விற்பனை செய்வது, காலி மதுபான பாட்டில்களை சேகரிப்பது தொடர்பான பார் உரிமங்களுக்கு டெண்டர் விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆண்டு ஆக.2-ல் அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும்வரை டாஸ்மாக் பார்களுக்கான டெண்டரை இறுதி செய்யக்கூடாது என கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் தமிழக அரசின் கூடுதல்தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் நேற்று ஆஜராகி, மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்தார். அப்போது, “தனி நீதிபதியின்உத்தரவால் தமிழகம் முழுவதும் 560 பார்களை மூட வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. இதனால்அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்சூழல் உருவாகியுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விரைந்து விசாரிக்க வேண்டும்” என கோரினார்.

இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், அரசி்ன மேல்முறையீட்டு வழக்கை ஜூன் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in