

சென்னையின் அண்ணா சாலை. ’சிம்சன்’ பேருந்து நிறுத்தம், சிந்தாதரிப்பேட்டை பறக்கும் ரயில், அரசினர் தோட்டம் மெட்ரோ என சாரிசாரியாக மக்கள் வந்து இறங்கி, பரபரப்பாகத் தங்கள் வேலைகளுக்காகச் சென்றுகொண்டிருக்கிறார்கள். எந்நேரமும் பரபரப்பாக மக்கள் இயங்கக்கூடிய பகுதி.
‘தி இந்து’ நாளிதழின் அலுவலக வாயில் அருகே ஒரு ரோட்டுக்கடை. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்துடன் வருபவர்கள் ‘ஐஸ் மோர் ரூ. 5’ என்கிற அட்டையைப் பார்க்கும்போது நிற்காமல் கடந்து சென்றுவிட முடியாது. இதை நடத்திவருபவர் சிந்தாதரிப்பேட்டையைச் சேர்ந்த குமார்.