

கல்லூரிக் காலத்தில் வெயில் வீணாகப் போகிறதென்று உச்சிப் பொழுதிலும் ஊரைச் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தால், `உனக்கு ஒரு பதிவுத் தபால் வந்திருக்கிறதாம், நீ கையெழுத்துப் போட்டால்தான் தபால்காரர் தருவா ராம்’ என்று அம்மா சொன்னார். உடனே சைக்கிளில் பறந்தேன். வழியில் ஒரு கோயில் நிழலில் வெயிலுக்காக ஒதுங்கியிருந்தார் தபால்காரர்.
என்னைப் பார்த்ததும் சிரித்த படியே, `எம்.ஜி.ஆருக்குக் கடிதம் போட்டிருந்தீங்களோ, அவங்கல்லாம் பதிவுத் தபாலை வாங்க மாட்டாங்க, கடிதம் திரும்பி வந்துட்டு’ என்று கொடுத்தார். நான் அவரின் படத்துடன் கனமான தபாலை எதிர்பார்த்துப் போனால், நான் போட்ட கடிதமே திரும்ப வந்திருக்கிறது.