Published : 11 Jan 2024 06:06 AM
Last Updated : 11 Jan 2024 06:06 AM
எங்கள் ஊருக்கான அடையாளமே மாடுகள்தாம். சின்னக்காடு, பெரியக்காடு என இரண்டு காடுகள் உள்ளன. இரண்டும் மேய்ச்சல் தரிசுகள். ஊர்க்காட்டு மாடுகளே இங்கேதான் மேயும். பெரியக்காடு மாடுகள் மேய்ந்து வீடு திரும்புகையில் காட்டிலிருந்து ஊர் இருக்கும் இரண்டு கல் தூரமும் மந்தையாகத் தெரியும். இப்போது ஊரில் இப்படியாக மந்தையைப் பார்க்க முடிவதில்லை.
ஒரு காலத்தில் ஆடு, மாடு இல்லாத வீடு கிடையாது. இப்போது ஓரிரு வீடுகளில்தாம் மாடுகள் உள்ளன. எங்கள் வீட்டில்கூட மாடு இல்லை. மாடு இல்லாதது ஒரு குறையாகத் தெரிவதில்லை. ஆனால், பொங்கல் வந்துவிட்டால் மாடு இல்லாதது பெருங்குறையாகத் தெரியும். மாடு இருப்பவர்கள் வீட்டில் வைக்கும் பொங்கலைப் போன்று மாடு இல்லாதவர்கள் வீட்டுப் பொங்கல் பெரும்பொங்கலாக இருப்பதில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT