

கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்கா, ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தைகள் கணிசமாக உயர்ந்தன.
நிஃப்டி 50 (Nifty50) ஏப்ரல் 2026-ல் 5.8%-க்கும் மேல் உயர்ந்தது, அதே வேளையில் நிஃப்டி மிட்கேப் 150 10.7%-க்கும் மேல் உயர்ந்து பரந்த சந்தைகள் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தின. நிஃப்டி ஸ்மால்கேப் 250 குறியீடு, ஏப்ரல் 2016-ல் அது தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவிலான மிக உயர்ந்த மாதாந்திர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.