

டெல்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில், இந்தியாவின் சர்வம் ஏஐ (Sarvam AI) நிறுவனம் மிக முக்கியப் பங்காற்றியது. விவேக் ராகவன் மற்றும் பிரத்யுஷ் குமார் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் நோக்கம், இந்திய மொழிகளுக்கென பிரத்யேகமான, குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதுதான்.
இந்த மாநாட்டில் தனது புதிய கண்டுபிடிப்பான 'Sarvam Kaze' என்ற ஏஐ திறன் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியது. பிரதமர் மோடி இந்தக் கண்ணாடிகளை அணிந்து சோதித்துப் பார்த்த புகைப்படங்கள் உலக அளவில் வைரலாகின.