Published : 17 Oct 2022 06:37 AM
Last Updated : 17 Oct 2022 06:37 AM
டிஜிட்டல் பரிவர்த்தனை மோசடி நிகழ்வுகள் நம் நாட்டில் சமீபத்தில் அதிகரித்துள்ளது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று அனைவரும் வங்கி பரிவர்த்தனை மோசடியால் ஏமாறுகின்றனர். இந்தியா எவ்வளவு வேகமாக டிஜிட்டல் மயமாகி வருகிறதோ, அதற்கு ஏற்ப புதிய புதிய மோசடிகளும் உருவாகி வருகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனை மிக முக்கியமானதாக மாறி இருக்கும் சூழலில், டிஜிட்டல் பரிவர்த்தனை சார்ந்து நிகழும் மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி ‘ராஜுவும் 40 திருடர்களும்’ என்ற தலைப்பில் ஒரு சிறிய கையேட்டை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை சார்ந்து எந்தெந்த விதங்களில் மோசடிகள் மேற்கொள்ளப்படுகின்றன, மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் என்பதைச் சாமானியர்களுக்கும் புரியும் வகையில் காமிக்ஸ் கதை வடிவில் 40அத்தியாயங்களாக இந்தச் சிறு கையேடு உருவாக்கப்பட்டிருக்கிறது. 40 அத்தியாயங்களில் 40வகையான மோசடிகள் விளக்கப்பட்டுள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT