Published : 03 Oct 2022 06:25 AM
Last Updated : 03 Oct 2022 06:25 AM
வேளாண் பண்ணையில் சுற்றுலாவாசிகளைத் தங்கவைத்து அவர்களை வேளாண் பணிகளில் ஈடுபட வைத்து வேளாண் சார்ந்து புரிதல்ஏற்படுத்துவதே வேளாண் சுற்றுலா ஆகும். வேளாண் சார்ந்து மக்களிடையே புரிதல் ஏற்படுத்துவதன் வழியே வேளாண் துறையை மேம்படுத்துவது வேளாண் சுற்றுலாவின் நோக்கமாக உள்ளது.
வேளாண் அறுவடையை கொண்டாடுவது, தோட்டத்தில் விளைந்த பழங்கள், காய்கறிகளைசுற்றுலாவாசிகளே அறுவடை செய்வது, பண்ணைக் குட்டைகளில் மீன் பிடிப்பது, ஊரக வேளாண் சந்தையைப் பார்வையிடுவது, கிராமப்புற கைவினைக் கலைஞர்களிடம் பொருள்கள் வாங்குவது, மாட்டு வண்டியில் சவாரி செய்வது உள்ளிட்டவை வேளாண் சுற்றுலாவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் ஆகும். உலக அளவில் 2019-ம் ஆண்டு வேளாண் சுற்றுலாவின் மதிப்பு 42.46 பில்லியன் டாலராக (ரூ.3.4 லட்சம் கோடி) இருந்தது. 2027-ம் ஆண்டு அது 62.98 பில்லியன் டாலராக (ரூ.5.1 லட்சம் கோடி) உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT