பகுதி நேர வேலைகள் | சம்பளம் பத்தலையா? - 3

பகுதி நேர வேலைகள் | சம்பளம் பத்தலையா? - 3
Updated on
3 min read

“ஆண்டவன் கொடுத்த கை, கால்கள் இருக்கு. நான் எங்கேயாவது போய், எப்படியாவது பிழைத்துக் கொள்கிறேன்” என்று தன்மானம் இருப்பவர்கள் சொல்லக் கேட்டிருக்கலாம். ”உழைப்பை ஒளித்து வைத்துத் துருப்பிடிப்பதை விட, உழைத்துத் தேய்ந்து போவதே மேல்” என்றார் சுவாமி விவேகானந்தர்.

இந்த உலகம், எல்லா திறமையாளர்களையும் உடனே அடையாளம் காண்பதில்லை. அங்கீகரிப்பதில்லை. அவர்களுக்கு வேலைகள், வாய்ப்புகள் கொடுப்பதில்லை. அப்படி ஒன்று கிடைக்கும் வரை அவர்கள் என்ன செய்ய? தவிர, எவ்வளவு காலத்துக்குத்தான் பெற்றோரை எதிர்பார்ப்பது? அவர்களுக்கு ஏன் சுமையாக இருக்க வேண்டும்? என் தேவைகளுக்கு, நானே சம்பாதித்துக் கொள்வதுதானே சரி! என்று நினைக்கும் பொறுப்பான பிள்ளைகள் எவ்வளவோ பேர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in