

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மத்திய அரசு கொண்டு வந்த மறுசீரமைப்பு அமலுக்கு வந்துள்ளது. இதுவரை 5%, 12%, 18%, 28% என 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி, இனி 5%, 18% என 2 அடுக்குகள் மட்டுமே இருக்கும். மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதும் வரி விகிதங்களை எளிமைப்படுத்துவதும்தான் இந்த வரி சீரமைப்பின் முக்கிய நோக்கம்.
இந்த ஜிஎஸ்டி மறு சீரமைப்பால், நாம் தினசரி பயன்படுத்தும் நுகர்பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. எண்ணெய், ஷாம்பு, பற்பசை, குளியல் சோப்பு, டூத் பிரஷ், ஷேவிங் கிரீம் போன்ற அதிக அளவில் விற்கப்படும் நுகர் பொருட்கள் (எப்எம்சிஜி) மீதான வரி 18-லிருந்து வெறும் 5 சதவீதமாக குறைந்துள்ளது.