

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, அவர் செய்து வரும் பல்வேறு அதிரடி மாற்றங்களில்ஒன்று, அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான இறக்குமதி தீர்வை. உலக நாடுகளுக்கான இறக்குமதி தீர்வையை அறிவித்து உடனடி அமல் என்று தெரிவித்து, பின்னர் 90 நாட்கள் அவகாசம் என்று இறங்கி வந்தார்.
சீனாவின் இறக்குமதி மீது நூறு, இருநூறு, 245 % என்று எல்லாம் பேசி, பிறகு ஒரேயடியாக குறைத்து, 30%ல் முடித்துக் கொண்டுவிட்டார். அதேபோல ஐரோப்பிய யூனியன், ஈரான், மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிக்கு 30%. அண்டை நாடு கனடாவுக்கும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள வங்கதேசத்துக்கும் 35% ஜப்பானுக்கும் மலேசியாவுக்கும் 25%. என்ன காரணத்தினாலோ, மியன்மர் என்ற பர்மாவுக்கு 40% என்றெல்லாம் முடிவுசெய்துவிட்டார்.