

சிட்பண்ட் என்பது ஒரு வகையான சேமிப்பு மற்றும் கடன் திட்டம். இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் ஒரு குழுவாக இணைந்து, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவார்கள். ஏல அடிப்படையில் சுழற்சி முறையில் ஒவ்வொருவருக்கும் அந்தத் தொகை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் மோசடிகள் நடைபெற்றதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததே இத்தகையை மோசடிகளுக்கு காரணம் என்கிறார் டிஎன்சி சிட்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி.சி.இளங்கோவன். இதுகுறித்து அவருடன் கலந்துரையாடியதிலிருந்து..