

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை இப்போது இருக்கும் ரூ.35 லட்சம் கோடியிலிருந்து 2030-ம் ஆண்டுக்குள் ரூ.86 லட்சம் கோடியாக (1 ட்ரில்லியன் டாலர்) அதிகரிக்கும் வகையில் மாநில அரசு பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலத்தின் பல நகரங்களில் தொழிற்பூங்காக்களை அமைத்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் எறையூரில் காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலை வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில், அந்த ஊரைச் சுற்றியுள்ள மக்கள் குறிப்பாக, பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இங்கு அமெரிக்க பிராண்டான `Crocs’ காலணிகள் ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.