Published : 08 Oct 2022 06:42 AM
Last Updated : 08 Oct 2022 06:42 AM
அமிலப் புகையுள் முதன்மையாக இருக்கும் சல்பர் டை ஆக்சைடு உருவாக்கத்துக்குப் புதைப்படிவ எரிபொருளும் ஒரு காரணம். இவற்றைப் பற்றிப் பேசினால் ‘வளம் குன்றும் வளர்ச்சி நாயகர்கள்’ உடனே பொங்கி எழுவார்கள். “ஏன் அது எரிமலையால் உருவாவதில்லையா?” என்று எதிர்க்கேள்வி கேட்பார்கள். அதை யாரும் மறுக்கவில்லை! அது மட்டுமா? நைட்ரஸ் ஆக்சைடும் மின்னல் போன்ற இயற்கை நிகழ்வால் உருவாக்கப்படுகிறது என்பதையும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், எரிமலையால் உருவாகும் சல்பர் டை ஆக்சைடைவிட ஆலைகளால் உருவாவது பத்து மடங்கு அதிகம் என்கிற உண்மையை மறைத்துவிட்டுப் பேச முடியுமா?
சும்மா இயற்கையின் மீது பழிசுமத்தித் தப்பிவிட முடியாது. செயற்கையாக உருவாக்கப்படும் அமில மழையே மண்வளத்தைப் பாதிக்கிறது. அதனால் மண்ணிலுள்ள சிலவகைப் பாக்டீரியா கொல்லப்படுவதால், அதன் நொதிப்புச் செயல்பாடு தடுக்கப்படுகிறது. மண்ணிலுள்ள அலுமினியம் போன்ற நச்சு அயனிகளின் செயலை அமிலமழை அதிகரிக்கச் செய்வதால், அவசியமான சில கனிம அயனிகள் தாவரங்களில் சேருவது தடுக்கப்படுகிறது. முதன்மையான சில கனிம உப்புகளும் மண்ணிலிருந்து அகற்றப்படுவதால், விளைச்சலும் மண்வளமும் குறைகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT