Published : 10 Sep 2022 08:32 AM
Last Updated : 10 Sep 2022 08:32 AM
கடற்கரையிலிருந்து நெடுஞ் சாலைக்கு வந்தால், ஒரு மணல் லாரி விரைகிறது. லாரியில் இருக்கும் ஈரமணலில் இருந்து தண்ணீர் சொட்டுகிறது. அவ்வாறு ஒரு லாரியில் இருந்து சொட்டும் நீரின் அளவு ஆயிரம் லிட்டர் என்கிறது ஒரு கணக்கீடு. ஒரு லாரி மணலில் இவ்வளவு நீர் இருந்தால், மொத்த ஆற்று மணலும் எவ்வளவு நீரைத் தேக்கிவைத்திருக்கும்? கற்பனை செய்து பாருங்கள்.
நீரைப் பற்றி நிறையச் சொல்ல முடியும். என்னுடைய ‘நீர் எழுத்து’ எனும் நூலில் அனைத்தையும் விரிவாக எழுதிவிட்டதால், இங்குச் சுருக்கமான அறிமுகத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். இன்றைக்கு நீர் மாசுபட்டுள்ளது என்பதை அறிவோம். நீர் மாசு எப்போது தொடங்கியது? ‘மௌன வசந்தம்’ நூலை எழுதிய ரேச்சல் கார்சன் கூறுகிறார்: “இயற்கை உருவாக்காத புதுப்புது பொருட்களை வேதியியலாளர்கள் கண்டுபிடிக்கத் தொடங்கிய நாளிலிருந்தே நீர் மாசு தொடங்கியது.”
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT