

வேடந்தாங்கலில் வெளிநாட்டுப்பறவைகள் குவிந்து இனப்பெருக்கம் செய்கின்றன என்று பலமுறை பத்திரிகைச் செய்திகளைப் படித்திருக்கலாம் அல்லது தொலைக்காட்சியில் செய்தி பார்த்திருக்கலாம். இந்தியாவில் இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் இந்தியப் பறவைகளே.
வெளிநாடுகளிலிருந்து வலசை வரும் பறவைகள் வடதுருவப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்பவையாகவும், அங்கு குளிர்காலத்தில் நிலவும் கடுமையான குளிர், அதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையைத் தவிர்க்கத் தென்துருவ நாடுகளில் தஞ்சம் தேடி வருகின்றன.