Published : 18 May 2024 06:10 AM
Last Updated : 18 May 2024 06:10 AM

ப்ரீமியம்
இன்பம் பொங்கும் இளவேனில் வெறும் ஞாபகமாகிவிடுமா?

சங்கத் தமிழர்கள் ஆண்டை ஆறு பருவங்களாக வரையறுத்திருந்தனர். அவற்றில் இளவேனில் (சித்திரை, வைகாசி) என்பது மிதமான வெப்பமும் தாவரங்கள் செழித்து வளரும் பருவமுமாக, இயல்பாகவே மகிழ்ச்சிக்கான ஒன்றாக இருந்தது. ஆனால், இன்றைய இளவேனில் காலம் எப்படியிருக்கிறது? ஏப்ரல் 14 தொடங்கி ஜூன் 14 வரையிலான காலத்தை இளவேனில் என்று கூற முடிகிறதா?

‘இப்போதே வெயில் இப்படி அடிக்கிறதே... இன்னும் போகப் போக என்னவாகுமோ!" என்கிற பேச்சு எல்லா இடங்களிலும் கேட்கத் தொடங்கிவிட்டது. இத்தகைய சலிப்பான மனப்பான்மை ஆண்டின் இந்தப் பருவத்தைக் கடப்பதைக் கடினமாக்கி வீட்டிற்குள்ளேயே முடக்கிப் போட்டுவிடுகிறது. இதே காலகட்டத்தில் வசந்த காலத்தைக் காணும் குளிர்ப் பிரதேசங்களில் வெப்ப அதிகரிப்பு அங்குள்ளவர்களால் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. அங்குள்ள மரங்களின் இலைகள் நிறம் மாறி, எங்கும் அழகு மிகுந்து காட்சித் தருகின்றன. ஆனால், காலநிலை மாற்றத்தின் பின்னணியில் இதுவும் நீடிக்குமா என்பது கேள்விக்குறிதான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x