Published : 06 Jul 2021 10:02 AM
Last Updated : 06 Jul 2021 10:02 AM

டி.என்.பி.எஸ்.சி.தேர்வுக்கு இணையவழிப் பயிற்சி

அரசுப் பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 தேர்வுகள் நடக்கவிருக்கின்றன. இந்தத் தேர்வை எதிர்கொள்வதற்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாநில தொழில்நெறி மையத்தில் இணையவழிப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த இலவச இணையவழிப் பயிற்சி சிஸ்கோ (Cisco) செயலி வழியாகவும் பிரவுஸர் மூலமாகவும் நேரடியாக வழங்கப்படவிருக்கிறது.

ஜூலை 5 முதல் தொடங்கும் இந்தப் பயிற்சியில் தேர்வுக்குத் தயாராவதற்கான பாடக்குறிப்புகளை வழங்குவதோடு, மாதிரித் தேர்வுகளும், அரசு அலுவலர்களே நடத்தும் மாதிரி நேர்முகத் தேர்வுகளும் தனிச் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. தேர்வுக்குத் தயாராகுபவர்கள் இந்த இணையவழிப் பயிற்சியில் சேர்வதற்கு க்யு.ஆர். கோடை ஸ்கேன் செய்து பதிவுசெய்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x