Last Updated : 06 May, 2025 03:39 PM

 

Published : 06 May 2025 03:39 PM
Last Updated : 06 May 2025 03:39 PM

இந்தியாவில் போர்க்கால ஒத்திகை முதல் கனடா பொதுத் தேர்தல் வரை: சேதி தெரியுமா? @ ஏப்.28 - மே 5

ஏப்.28: ஐபிஎல் வரலாற்றில் 35 பந்துகளில் சதமடித்த வீரர் என்கிற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷி படைத்தார்.

ஏப்.28: கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி தொடர்ந்து 3ஆவது முறையாக வெற்றி பெற்றது.

ஏப்.28: சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ. பெரியசாமியைத் திண்டுக்கல் நீதிமன்றம் விடுவித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. 2006-11 காலத்தில் ஐ. பெரியசாமி அமைச்சராக இருந்தபோது ரூ.2.01 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2012இல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிந்தது.

ஏப்.28: தமிழக அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்ட மனோ தங்கராஜூக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு பால்வளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஏப்.28: தமிழகத்தில் காவலர்களுக்கு விடுமுறை வழங்கும் அரசாணையை முறையாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

ஏப்.29: காஜி, காஜியத், ஷரியா போன்ற முஸ்லீம் நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை எனவும் அவை பிறப்பிக்கும் உத்தரவுகள் யாரையும் கட்டுப்படுத்தாதது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏப்.29: கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்கம் மசோதா உள்பட 18 மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஏப்.29: தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதற்கு முப்படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதாகப் பாதுகாப்புத் துறை ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார்.

ஏப்.30: காஞ்சி சங்கரமடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்றார். இவர் சங்கரமடத்தின் 71-ஆவது பீடாதிபதியாவார்.

ஏப்.30: நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஏப்.30: தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் புதிய தலைவராக ‘ரா’ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டார்.

மே 1: தீவிரவாத தாக்குதல் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியது.

மே 2: கிறிஸ்தவராக மதம் மாறிய நாள் முதலே மதம் மாறியவருக்கு எஸ்.சி., எஸ்.டி. தகுதி இழப்பு ஏற்பட்டுவிடும் என்று ஆந்திர உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

மே 3: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தானிலிருந்து அனைத்துப் பொருட்கள் இறக்குமதிக்கும் இந்தியா தடை விதித்தது.

மே 4: நாடு முழுவதும் 5,453 தேர்வு மையங்களில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

மே 4: சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது.

மே 5: நாடு முழுவதும் மே 7 அன்று போர்க்கால ஒத்திகை நடத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்தது.

மே 5: கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ. பழனி, கொ.ம.கோதண்டம், புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன.

மே 5: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றிய சி. குமரப்பன், கே. ராஜசேகர் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்றனர்.

மே 5: ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத தடைக் காலம் முடிவுக்கு வந்தது.

தொகுப்பு: மிது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x