

புத்தகங்கள் நல்ல நண்பர்கள் எனும் வாசகம் எனக்கு மிகவும் பொருந்தியது. சிறுவயது முதலே தனிமைதான் அதிகம் கிடைத்தது. இயல்பாகவே வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. படித்ததில் பிடித்ததை எழுதி வைத்துக்கொள்வேன். வாசிக்கும்போது அந்தக் கதை களத்தினுள்ளே இருப்பதைப் போல உணர்வேன்.
வாழ்க்கையில் துன்பப்பட்டுத் துயருற்றுக் கலங்கித் தவித்து, சுயபச்சாதாபம் மேலோங்கி, வழி தெரியாது கலங்கிக் குழம்பி, செய்வதறியாது தவிக்கையில் இனி இதுதான் என மனம் அடிமைப்பட்டு மூழ்கத் தொடங்கிய நேரத்தில் எதிர்பாராது வாசித்த வரிகள் என்னை உலுக்கிச் சிந்திக்க வைத்து மீண்டெழ உதவின. எதிர்பாராததை எதிர்பார்க்க வைப்பதுதானே வாழ்க்கையின் சுவாரசியம்.