பார்த்தோம் ரசித்தோம்! | புதிய வானம் புதிய பூமி

பார்த்தோம் ரசித்தோம்! | புதிய வானம் புதிய பூமி
Updated on
1 min read

ஒரு மே மாத அதிகாலையில் குடும்பத்துடன் தஞ்சாவூருக்குப் பயணத்தைத் தொடங்கினோம். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் தஞ்சாவூரில் சாலையின் இருபுறமும் பச்சை பசேல் எனும் புல்வெளிகள் காற்றில் ஆடுவது எங்களை வரவேற்பது போலத் தோன்றியது. காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு தஞ்சை பெரிய கோயிலுக்குள் சென்றோம். கோயிலின் பிரம்மாண்டம் எங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தது. சிற்பங்களின் அழகைப் பார்த்து ரசித்தபடியே தரிசனத்துக்குச் சென்றோம், பெருவுடையாரைத் தரிசித்தோம்.

பிரகாரத்தில் காககன்னிகை சந்நிதியில் தண்ணீர் வீணாகச் சென்று குளம் போலத் தேங்கியிருந்தது. அந்தத் தண்ணீரில் நடப்பது பக்தர்களுக்குச் சிரமத்தை அளித்தது. கோயிலின் அழகைச் சீர்குலைக்கும் வகையில் கோயிலின் மதில்சுவர் அருகில் முட்புதர்களும் ஞெகிழிக் குப்பைகளும் இருந்தன.

கோயிலின் வெளியே மக்கள் சாலையைக் கடக்கும் வகையில் காவலர்கள் சில நிமிடங்கள் போக்குவரத்தை நிறுத்துவது சிறப்பு. மதியம் ஒரு மணிக்கு கங்கை கொண்ட சோழபுரம் சென்றோம். மூன்று மணிக்கு வடலூரில் சத்திய தர்ம சாலைக்குச் சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்பினோம். இந்த இனிய பயணம் எங்களுக்கு இயற்கைச் சூழலை ரசிக்கக் கற்றுக்கொடுத்தது.

- ப.கீர்த்திமாலினி, திருவண்ணாமலை.

பார்த்தோம் ரசித்தோம்! | புதிய வானம் புதிய பூமி
மாணவர்களுக்கு வலியுறுத்துகிறேன் | வாசிப்பை நேசிப்போம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in