பார்த்தோம் ரசித்தோம்! | புதிய வானம் புதிய பூமி

பார்த்தோம் ரசித்தோம்! | புதிய வானம் புதிய பூமி
Updated on
1 min read

ஒரு மே மாத அதிகாலையில் குடும்பத்துடன் தஞ்சாவூருக்குப் பயணத்தைத் தொடங்கினோம். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் தஞ்சாவூரில் சாலையின் இருபுறமும் பச்சை பசேல் எனும் புல்வெளிகள் காற்றில் ஆடுவது எங்களை வரவேற்பது போலத் தோன்றியது. காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு தஞ்சை பெரிய கோயிலுக்குள் சென்றோம். கோயிலின் பிரம்மாண்டம் எங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தது. சிற்பங்களின் அழகைப் பார்த்து ரசித்தபடியே தரிசனத்துக்குச் சென்றோம், பெருவுடையாரைத் தரிசித்தோம்.

பிரகாரத்தில் காககன்னிகை சந்நிதியில் தண்ணீர் வீணாகச் சென்று குளம் போலத் தேங்கியிருந்தது. அந்தத் தண்ணீரில் நடப்பது பக்தர்களுக்குச் சிரமத்தை அளித்தது. கோயிலின் அழகைச் சீர்குலைக்கும் வகையில் கோயிலின் மதில்சுவர் அருகில் முட்புதர்களும் ஞெகிழிக் குப்பைகளும் இருந்தன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in