

அந்த இருபதடிகள்! என் எழுதும் அறைக்கும்
சமையலறைக்கும் இடையே
இருபதடிகள்!
அவற்றைக் கடப்பதற்குள்
இரவாகி விடுகிறது
பகல்முழுதும் அலைபாயும்
எழுதவேண்டிய வரிகளை
தனக்குள் எழுதி எழுதி
ஒத்திகை பார்க்கும் மனமோ
நொடியில் கடந்து விடுகிறது
பலநூறு அடிகளை!
லௌகீகத்தின் அந்த இருபதடிகளில்
முட்டிமோதும் என் அன்றாடங்களை
கடப்பதற்குள் இரவாகி விடுகிறது!
- இமையாள்