

மிகவும் ஏழ்மையான மீனவக் குடும்பத்தில் பிறந்து இளங்கலை பட்டப் படிப்பை முடித்திருந்தேன். நிரந்தர வேலை இல்லாமல் அங்கும் இங்குமாகத் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துவந்தேன். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திருமணம் முடிந்து குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டு மாப்பிள்ளையாக என் மனைவி வீட்டிலேயே இருந்துவிட்டேன்.
என் பட்டப் படிப்பை வைத்து தனியார் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றிவந்தேன். பி.எட்., படித்திருந்தால் மட்டுமே ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்கிற நிலை ஏற்பட்டபோது, என் மனைவி சிறிதும் யோசிக்காமல் அவரது நகைகளை அடகு வைத்துத் தனியார் கல்வியியல் கல்லூரியில் என்னை பி.எட்., படிக்கவைத்தார்.