

ஜெயா சந்தானம்
தொண்ணூறு வயதைத் தொட்டு விட்டதால் மதிய வேளையில் ஓய்வெடுத்துக்கொண்டு இருப்பார் என்று நினைத்தபடி சென்னை அபிராமபுரத்தில் இருக்கும் ஜெயா சந்தானத்தின் வீட்டுக்குச் சென்றால், தஞ்சாவூர் ஓவியம் வரைவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்தபடி பளிச்சென்ற புன்னகையோடு வரவேற்கிறார்.
ஈராயிரக் குழவிகள் அடிக்கடி உதிர்க்கிற ‘போரடிக்கிறது’ என்கிற சொல் தன் அகராதியில் இல்லை என்று சிரித்தபடி பேசுகிற ஜெயாவுக்குச் சிறுவயது முதலே ஓவியத்திலும் கைவினைப் பொருள்களைச் செய்வதிலும் ஆர்வம் அதிகம். அதனால், இன்டர்மீடியட் படிப்பிலும் அதையே தேர்ந்தெடுத்திருந்தார்.