இருபது ரூபாயால் கிடைத்த அடையாளம் | என் பாதையில்

இருபது ரூபாயால் கிடைத்த அடையாளம் | என் பாதையில்

Published on

நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, “யாரெல்லாம் ஃபுட்பால் விளையாட வர்றீங்க?” என்று எங்கள் விளையாட்டு ஆசிரியைக் கேட்ட அந்த ஒரு கேள்விதான் என் வாழ்க்கையை மாற்றப்போகிறது என்று அன்று எனக்குத் தெரியாது. விளையாட்டுப் பற்றி ஏதும் தெரியாவிட்டாலும் ஏதோவோர் ஆர்வத்தில் என் பெயரையும் என் தோழிகளின் பெயரையும் கொடுத்துவிட்டுப் பயிற்சி பெற்றோம்.

ஒரு முக்கியமான போட்டி வந்தது. என் ஆட்டத்தைப் பார்க்க என் அம்மாவும் அப்பாவும் ஆசையோடு மைதானத்திற்கு வந்திருந்தார்கள். ஆனால், அன்று எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘சப்ஸ்டிடியூட்’ ஆக மைதானத்திற்கு வெளியே நின்றிருந்தேன். அன்று வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று தேம்பித் தேம்பி அழுதேன். ஆனால், அந்த நாள் அது எனக்குள் ஒரு உத்வேகத்தை உண்டாக்கியது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in