குறிப்புகள் பலவிதம்: ஆவி நல்லது

குறிப்புகள் பலவிதம்: ஆவி நல்லது
Updated on
1 min read

# சுத்தமான தண்ணீரில் வேப்பிலை, நொச்சி இலை இரண்டையும் நன்கு கொதிக்கவைத்து ஆவி பிடித்தால் சளி பிடிக்காது.

# துளசி இலை, இரண்டு கிராம்பு, கொஞ்சம் தும்பைப் பூ ஆகியவற்றைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து ஆவி பிடித்தால் சளி, இருமல், தும்மல் ஆகியவை குறையும்.

# எலுமிச்சை விதைகளை நசுக்கி அத்துடன் மஞ்சள் தூளைச் சேர்த்து நீரில் கலந்து கொதித்தவைத்து ஆவி பிடித்தால் நீர்க்கோவை, தலைபாரம் குறையும்.

# கற்பூரவல்லி, துளசி, புதினா இலைகளை நசுக்கிக் கொதிக்கவைத்து ஆவிபிடித்தால் இறுகிய சளி வெளியேறும்.

# மூக்கடைப்பு நீங்க ஆவி பிடிக்கும்போது வாயால் ஆவியை உள்வாங்கி சிறிது நேரம் தம் பிடித்து பிறகு மூக்கு வழியாக வெளியேற்றினால் மூக்கடைப்பு நீங்கும்.

# ஓமம், உப்பு, சுண்ணாம்பு, பெருங்காயம், திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவைத்து ஆவி பிடித்தால் வாதம், உடல்வலி நீங்கும்.

- சி.செல்வராஜ், புலிவலம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in