

கோவையைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவிகள் மித்ரா, ஸ்ரீதேவி இருவரும் நேபாளத்தில் நடைபெற்ற இந்தோ - நேபாளம் சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். இருவருமே தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் மிக்கவர்கள்.
ஏழு வயது முதல் சிலம்பம் கற்றுவரும் மித்ரா, மற்ற விளையாட்டுகளைவிடச் சிலம்பத்தில் தன்னுடைய தனித்திறமையைக் காட்ட முடியும் என்பதற்காக இதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அப்பா மணிவண்ணன், அம்மா சுமித்ரா இருவரும் தங்கள் மகளின் விருப்பத்துக்குத் துணைநிற்க, பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுவருகிறார் மித்ரா. கண்ணைக் கட்டிக்கொண்டு ஒன்றரை மணிநேரம் சிலம்பம் சுழற்றிய மகளின் உலகச் சாதனையைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் மித்ராவின் தந்தை மணிவண்ணன். சிலம்பம் சுழற்றிய கைகள் வீணையிலும் விளையாடுகின்றன.